Saturday 7 November 2020

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக உயர்வு..!!!

SHARE


நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 3 வாரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளார்.

புறக்கோட்டையைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும் மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரும் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 69 வயதுடைய பெண், கணேமுள்ளையைச் சேர்ந்த 88 வயதுடைய பெண்ணும் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கடந்த ஜனவரி முதல் 12 ஆயிரத்து 970 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 186 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
SHARE