Sunday 22 November 2020

கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு..!!!

SHARE


இன்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான 4 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை ​சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

SHARE