Saturday 21 November 2020

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று..!!!

SHARE

 


கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் இருந்து அவருடைய மகள் வருகை தந்திருந்தார். அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

கண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

SHARE