நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.
மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 6 வாரங்களில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 17 ஆயிரத்து 516 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 ஆயிரத்து 806 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:
sri lanka news