யா/எழுதுமட்டுவாழ் ஸ்ரீகணேசா வித்தியாலயம் நூறு வீத சித்தி..!!!


எழுதுமட்டுவாழ் ஸ்ரீகணேசா வித்தியாலயத்தில் இருந்து இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் நூறு வீத சித்தியை பெற்றுக் கொண்டனர்.

குறித்த பாடசாலையில் இருந்து இம்முறை பதினொரு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுள் மூன்று மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல்  புள்ளிகளை பெற்றுள்ளனர். செல்வன் ச.சஞ்சேஜன் - 191 புள்ளிகள், செல்வன் க.கம்சிகன்-182 புள்ளிகள், செ.தருண்-166 புள்ளிகள்  பெற்றுள்ளனர். அதே போல் 100 புள்ளிக்கு மேல் 10 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அனைவரும் சித்திப்புள்ளிக்கு மேல் பெற்று 100% சித்தியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதோடு இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் நெறிப்படுத்திய அதிபர் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்தினையும் தெரிவிப்பதோடு தற்போது வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு பாடசாலையாகவும்  இப் பாடசாலை மிளிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here