தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை இந்த ஆண்டு ஓகஸ்டில் நடத்த முடியாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்தார்.
பாடசாலைகளில் முறையான கல்வி நடவடிக்கைகள் இல்லாததால் பாடத்திட்டங்கள் முறையாக மூடப்படவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, இரண்டு பரீட்சைகளையும் வேறு கால அட்டவணையில் நடத்த கல்வி அமைச்சர், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இது தொடர்பாக மேலதிக கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு நடத்த உள்ளது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் கூறினார்.
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் நடத்தப்படாது. ஆனால் புதிய திகதிகள் இன்னும் முடிவு செய்யப்
படவில்லை என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.