கொரோனோவால் கல்வியங்காட்டு வாசி மரணம்..!!!


யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

முதியவரின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முள்ளேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளது

Previous Post Next Post


Put your ad code here