இன்று (11) அதிகாலை முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
4 மாவட்டங்களுக்கு சொந்தமான 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குருநாகல் மாவட்டத்தின் நிகதழுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
தனிமைப்படுத்தப்படட பகுதிகள்
மாத்தறை மாவட்டம்
மாத்தறை பொலிஸ் பிரிவு
- உயன்வத்த 417 கிராம உத்தியோகத்தர் பிரிவு
- உயன்வத்த வடக்கு 417D கிராம உத்தியோகத்தர் பிரிவு
மாத்தளை மாவட்டம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவு
- உடஹபுவித்த E367 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவு
- வல்கம்பாய கிராம உத்தியோகத்தர் பிரிவின் திப்புட்ட கிராமம்
- வல்கம்பாய கிராம உத்தியோகத்தர் பிரிவின் கொஸ்கஸ்தென்ன கிராமம்
புத்தளம் மாவட்டம் கொஸ்வத்த பொலிஸ் பிரிவு
- மெத கிரிமெட்டியான 466 A கிராம உத்தியோகத்தர் பிரிவு
