இணுவிலில் ஒரு பகுதியை முடக்க தீர்மானம்..!!!


யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு சிபார்சு செய்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தில் ஜே/190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியினை தனிமைப் படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் சிபார்சு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here