நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டால் பொதுமக்கள் பொறுப்பேற்கவேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
பயணத்தடை கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள காலகட்டத்தில்கூட, பொதுமக்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் இலாபத்திற்காக சுகாதார விதிகளை புறக்கணித்து வருவதைக் காணலாம் என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மக்கள் எதிர்பார்த்தபடி சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
எனவே, பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்