Tuesday 20 July 2021

யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 115 பேர் கொரோனாவால் உயிரிழப்பு..!!!

SHARE

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த 84 வயதுடைய ஆணொருவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில், 115 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE