அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி திங்களன்று ஆரம்பம்..!!!


பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

“ஒவ்வொரு ஆசிரியருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முறையான திட்டத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். நாடுமுழுவதும் உள்ள 2 லட்சத்து 42 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்.

பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவோம் என்று நம்புகிறோம்” என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, வயது வேறுபாடின்றி ஆசிரியர்கள் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here