யாழ்ப்பாணத்தில் 58 பேர் உட்பட வடக்கில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ்ப்பாணத்தில் 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக, யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களின் பரிசோதனை முடிவுகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 373 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 47 பேர் உட்பட வடக்கில் 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூட முடிவுகள்
யாழ்.மாவட்டத்தில் 47 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 20 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 12 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

நொதேர்ன் சென்ரல் ஹொஸ்பிரலில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 13 பேர்,

பளை பிரதேச வைத்தியசாலையில் 06 பேர்,

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 06 பேர்

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 12 பேர்,

வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட முடிவுகள்

யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் 170 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 11 பேர்

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில்

பளை பிரதேசத்தில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன்

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேர்,

முழங்காவில் கடற்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');