நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் கொவிட் செயலணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டதன் பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.