Wednesday 29 September 2021

நாவற்குழியில் வீடு புகுந்து தாக்குதல் - தந்தை மற்றும் இரு மகன்கள் காயம்..!!!

SHARE

நாவற்குழி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

நாவற்குழி ஜே / 294 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் , வீட்டின் ஜன்னல்கள் , கதவுகளை உடைத்து அட்டகாசம் புரிந்ததுடன் , வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகன்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த தந்தை , இரு மகன்களையும் , அயலவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE