பயணக் கட்டுப்பாடு குறித்து ஜனாதிபதி அதிரடி உத்தரவு..!!!




தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கடுமையாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளமையால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்புத் துறையினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

இன்று (15) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி மேற்கண்ட பணிப்புரையை விடுத்தார்.
Previous Post Next Post


Put your ad code here