மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் 10 நாள்களுக்கு நீடிப்பு..!!!




நாளை அதிகாலை 4 மணிக்கு முடிவடையவிருந்த மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்தார்.

அதன்படி, தற்போதைய மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட உள்ளன
Previous Post Next Post


Put your ad code here