யாழில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு..!!!


யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும், யாழ்ப்பாணத்தில் தற்பொழுது கொரோனாத் தொற்று நிலைமை சற்று குறைவடைந்து காணப்படுகின்றது

இருந்தபோதிலும், நேற்று கிடைத்த பிசிஆர் பரிசோதனை அடிப்படையில் யாழில் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

யாழில் இன்று வரை 17,664 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 452 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. 17,500 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்பொழுது இயல்பு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டு தலங்களுக்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ஆகவே, மக்கள் சற்று அவதானமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுவது அவசியமாகும்.

ஆரம்பபிரிவு பாடசாலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. ஆரம்ப பிரிவு பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தபோது, மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது.

எனினும், தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்படுன்றது.

மாகாணங்களுகிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடும் எதிர்வரும் 31ஆம் திகதி நீக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் போன்றவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் சுகாதார நடைமுறையைப் பேணி, கட்டுப்பாடுகளுடன் தமது அன்றாட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here