கொரோனோ தடுப்பூசி பெறாத கர்ப்பவதிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குகிறோம்..!!!


யாழ்.போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி பெறாத கர்ப்பவதி பெண்களுக்கும் சாதாரண நிலைமையில் வழங்கப்பட்டதை போன்று சிகிச்சை வழங்கப்படுவதாக பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மற்றும் பிரசவத்திற்காக கர்ப்பவதிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதில் தடுப்பூசி பெற்றவர்கள் பெறாதவர்கள் என்ற பேதம் எதுவும் காட்டப்படவில்லை. சாதாரண நிலைமையில் வழங்கப்பட்டதை போன்று சிகிச்சை வழங்கப்படுகின்றது. தடுப்பூசி பெறாதவர்கள் எதேனும் காரணங்களுக்காக தடுப்பூசி பெறாது விட்டிருக்கலாம், அதற்காக அவர்களுக்கு சிகிச்சை வழங்க மறுக்க முடியாது என தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here