குளவி கொட்டுக்கு தாக்குதலுக்கு இலக்காகி 9 பேர்கள் இருவேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் பதுளை - நமுனுகுல - இந்துகலை மேற்பிரிவில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்குச் சென்ற 9 தொழிலாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் 4 பேர் பதுளை வைத்தியசாலையிலும், 3 பேர் தெமோதரை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 பெண்களும் 4 ஆண்களுமே இவ்வாறு தாக்குலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Tags:
sri lanka news