ஐபிஎல் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 136 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட டெல்லி கெப்பிடல் அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
டெல்லி அணி சார்பில் சிகர் தவான் அதிகபட்சமாக 36 ஓட்டங்களையும், சிரேயாஸ் ஐயர் ஆட்டமிக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுக்களையும், லோகி பேர்கஷன் ஒரு விக்கெட்டையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றிப் பெறும் அணி எதிர்வரும் வௌ்ளிக்கிழமை இடம்பெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Tags:
Sports News