இன்று முதல் வானிலையில் மீண்டும் மாற்றம்..!!!


நாட்டில் இன்று (23) முதல் மீண்டும் பலத்த மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதனடிப்படையில் வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல், ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 50 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here