ஏஎல், ஓஎல், ஸ்கொலர்ஷிப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிப்பில் மாற்றம் – விரைவில் சுற்றறிக்கை..!!!




கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்களைச் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்காலத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

தரம் 11 முதல் தரம் 13 வரையிலான பாடசாலை மாணவர்களில் 73 சதவீதமானவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here