Tuesday 30 November 2021

எரிவாயு வெடிப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்..!!!

SHARE

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார்.

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாா்.
SHARE