ஊரடங்குச் சட்டம் குறித்து தற்போது வெளியான அறிவிப்பு..!!!


நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளைக் காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், நாளை பிற்பகல் 2 மணிக்கு மீளவும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து மே 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை வியாழக்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை நாளை காலை 7 மணிக்கு நீக்கப்படும் என்று இன்றிரவு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றிரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் அறிவித்துள்ளது.
வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையில்லாமல் குழுக்களாக கூட வேண்டாம் என்றும், கொள்ளை அல்லது நாசகார செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுட்டுக் கொல்லப்படலாம் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post


Put your ad code here