Saturday 21 May 2022

சிலரால் அச்சுறுத்தல்- எரிபொருள் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என்கிறார் அமைச்சர்..!!!

SHARE

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் ஏற்றிச்செல்லும் லொறிகளை சில குழுக்கள் அச்சுறுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பயணிக்கும் லொறிகளை மடக்கிப் பிடித்து, அங்குள்ள எரிபொருள் நிலையங்களில் தரையிறக்குமாறும், அவ்வாறு இல்லையென்றால் லொறிகளுக்கு தீ வைப்பதாக குறித்த குழுக்கள் அச்சுறுத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமானால் போக்குவரத்து ஊழியர்களின் நலன் கருதி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

SHARE