Saturday 7 May 2022

கிளிநொச்சி செல்வாநகர் ஐயப்பன் ஆலயத்திலிருந்து சடலம் ஒன்று மீட்பு..!!!

SHARE

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று (07) காலை பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE