வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைகளை நடத்த தீர்மானம்?


எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு முறையே மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளது.

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை, அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, செயற்படுத்துவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here