12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்..!!!




கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (15) இரவு 10.00 மணி முதல் நாளை (16) காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பில் நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டம் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here