காய்ச்சல் பீடிக்கப்பட்டு, யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழப்பு..!!!



யாழ்.போதனா வைத்திய சாலையில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி கணேச புரம் பகுதியை சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தைக்கு கடந்த 7 நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதுடன் , சளியும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here