யாழ். அரசடியில் ஊசி மூலம் போதை மருந்தை ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் கைது..!!!


யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்தை ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் உள்ள நீதவான் நீதிமன்றுகளால் திறந்த பிடியாணைகள் ஐந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் தாங்கள் பளைப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்தே போதை பொருளை பெற்றுக் கொள்வதாக ஆரம்பகட்ட விசாரணையில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here