Sunday 16 October 2022

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது..!!!

SHARE

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்ப்பாணம் மாநகரம் பொம்மை வெளியில் முன்னெடுத்த நவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரிலிருந்து போதைப்பொருளை எடுத்து வந்து விற்பனை செய்வது தெரிய வந்ததுடன், அதுதொடர்பில் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதே இடத்தைச் சேர்ந்த 26, 34 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.

தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
SHARE