Thursday 24 November 2022

யாழில் பொலிஸாரின் சமிஞையை மீறியவருக்கு ஒரு மாத சிறையும் தண்டமும்..!!!

SHARE


பொலிஸாரின் சமிஞையை மீறி மோட்டார் சைக்கிள் ஓடிய இளைஞனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை போக்குவரத்து பொலிஸார் மறித்தனர். பொலிஸாரின் சமிஞையை மீறி இளைஞன் அவ்விடத்திலிருந்து தப்பியோடி இருந்தார்.

குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தின் அடிப்படையில், இளைஞனை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதன் போது இளைஞன் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஒரு மாத சிறை தண்டனை விதித்த மன்று, 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது.


SHARE