Wednesday 16 November 2022

நாளை முதல் கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிப்பு..!!!

SHARE

நாளை(17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெறுவதற்காக 20,000/- ரூபா அறிவிடப்படவுள்ளது.

சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூ. 3,000/- முதல் ரூ. 5,000/- ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


SHARE