யாழ். நயினாதீவில் தோன்றிய அம்மன் சிலை..!!!


நயினாதீவில் முருகைக் கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ளது.

நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் ஆதி தொட்டு இந்த அம்மனை வழிபாட்டு வருகிறார்கள்.

சிறிய அளவில் ஆரம்பத்தில் காணப்பட்ட ஆலயம் இன்று பெரிதாக புனரமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயம் ஆலடி அம்மன் ஆலயமென அழைக்கப்படுகிறது. சில தினங்களில் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக சிரமதான வேலைகளின் போது முருகைக்கல்லால் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று நிலத்திலிருந்து மேற்கிளம்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ் அம்மன் சிலை ஐந்து தலை பாம்பின் கீழ் காட்சியளிப்பதாகவுள்ளது. அம்பாளை உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மிகுந்து ஆர்வத்துடன் பார்வையிட்டு வழிபாடாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post


Put your ad code here