Sunday 19 February 2023

பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்..!!!

SHARE


அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை (20) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

நாளை ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை தொடரும் என்றும், 2023 ஆம் ஆண்டின் முதலாம் தவணை மார்ச் 27 ஆம் திகதி முதல் தொடங்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், முதலாம் தரத்துக்கு மாணவர்களுக்கான புதிய பாடசாலை தவணை, முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

SHARE