யாழில், தாய் பால் கொடுக்காததால் உயிரிழந்த குழந்தை..!!!



யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றையதினம்(18.03.2023) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த குழந்தையின் தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here