யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் மணிக்கூட்டுடன் இணைந்த அலங்கார தூபி இன்றைய தினம் திருநெல்வேலி வர்த்தகர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த தூபி நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாபன் மயூரன் அவர்களின் திட்டத்தில் அவரது காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு நல்லூர் பிரதேச சபை மற்றும் திருநெல்வேலி வர்த்தகர்களின் நிதி பங்களிப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.