யாழ். மாநகர சபை தீயணைப்பு சேவை இடைநிறுத்தம்..!!!


யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்றைய தினம் வியாழக்கிழமை மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.

யாழ் மாநகர தீயணைப்புச் சேவையில் ஈடுபடும் தீயணைப்பு வாகனத்தின் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here