ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியது: ஐசிசி..!!!


ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவைஇடைநிறுத்தியுள்ளது

.இது தொடர்பில் ஐசிசி மேலும் தெரிவித்துள்ளதாவது

சர்வதேச கிரிக்கெட் பேரவை உடனடியாக அமுலுக்குவரும்வகையில் இலங்கையின் கிரிக்கெட் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

இன்று கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கை தனது கடப்பாடுகளை பாரதூரமாக மீறிவிட்டதாக தீர்மானித்துள்ளது.

குறிப்பாக இலங்கை கிரிக்கெட் தனது நடவடிக்கைகளை சுயாதீனமாக முன்னெடுப்பது மற்றும் தனது நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருப்பது போன்றவை மீறப்பட்டுள்ளன.

இடைநிறுத்தத்திற்கான நிபந்தனைகள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here