வெளிநாடொன்றிலிருந்து நாடு திரும்பிய இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!!!


டுபாயிலிருந்து இலங்கை வந்த இருவர் 10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் இன்று (19) இவர்களை கைது செய்துள்ளதாக சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மதுபான போத்தல்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் பெட்டிகளில் வைத்து விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச்செல்ல முற்பட்ட போதே குறித்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here