பிரித்தானியா சென்று ஐந்து மாதங்களில் உயிரிழந்த முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்..!!!



திருமணம் செய்து இரண்டு வருடமான நிலையில் பிரித்தானியாவுக்கு
கணவரிடம் சென்று ஐந்து மாதங்களில் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம்பெரும். துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது ,

இரண்டு வருடங்களுக்கு முன் குறித்த பெண் திருமணம்செய்துள்ளார் ,கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பிரித்தானியாவுக்கு கணவரிடம் சென்று இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது .

இதற்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் இருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசாகன் சாதுஜா வயது 31 என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here