வார இறுதி நாட்களிலும் யாழ்ப்பாணம் - கொழும்பு இன்டர்சிற்றி ரயில் சேவை..!!!


யாழ்.காங்கேசன்துறைக்கும் கொழும்புக் கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தக் குளிரூட்டப்பட்ட தொடருந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடருந்துப் பிரதிபொது முகாமையாளர் என்.ஜே.இடி போலகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும் தொடருந்து 11.38 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்தை வந்தடையும்.
அன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.19 மணிக்கு கோட்டை நிலையத்தை அடையவுள்ளது.

பத்து முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட இந்த நகரங்களுக்கு இடையேயான தொடருந்தில் ஒரு பயணத்திற்கான டிக்கெட் கட்டணம்
3,200 ரூபா என தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here