நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு..!!!


யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் பாலசுந்தரம் டிலுசன் (வயது-43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் சடலத்தினை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மரண விசாரணைகளை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு அறிவுறுத்தினார். உடற்கூற்று பரிசோதனையில் சுருக்கிட்டதனாலயே மரணம் சம்பவித்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here