கடும் வெப்பம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..!!!


பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து பொதுமக்களை அவதானத்துடன், இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here