கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று(18.06.2025) தந்தையர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதி பேச்சாளராக நல்லூர் பிரதேச சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் , கவிஞர் தர்மினி ரஜீபன் கலந்து கொண்டார்.
இரண்டாம் வருட ஆரம்ப கல்வி நெறி ஆசிரிய மாணவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வை ஏ.எம் பாத்திமா பர்சானா நெறிப்படுத்தினார் ர.தேவமணி "அப்பா" எனும் தலைப்பில் உரை ஆற்றினார்.
அதிதிக்கான அறிமுக உரையை . ஜே. சுலோசனாதேவி வழங்கினார்.
முதலாம் வருட ஆங்கில நெறி ஆசிரிய மாணவி கௌசிகாவினால் தந்தை பற்றிய சிறப்பு ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
அதிதிப்பேச்சாளராகக் கலந்துகொண்ட கவிஞர் தர்மினி ரஜீபன் கலாசாலை முகாமைத்துவ குழுவினரால் கௌரவிக்கப்பட்டார்.