யாழில் கோரவிபத்து இரண்டு இளைஞர்கள் பலி..!!!


புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார்சைக்கிளில் அதி வேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக் கட்டுப்பாட்டை

இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று(2) மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது- 18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here