யாழில். இ.போ.ச பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து ; பெண்ணொருவர் உயிரிழப்பு..!!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்தில் , பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த செல்வகுணசிங்கம் பேரின்பநாயகி (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்துடன் , எழுதுமட்டுவாழ் பகுதியில் சிறு வீதியில் இருந்து யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஏற்ற முற்பட்ட பெண் விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here