யாழில் நாளை மின்தடை..!!!


வடக்கு மாகாணத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் மாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் எந்திரி எஸ்.பிரபாகரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், வவுனியா - மன்னாருக்கு இடையிலான 220 கிலோ வோட் மின்சார பரிமாற்ற வடத்தை மாற்றி யமைப்பதற்கான வேலைகள் இடம்பெறவி ருக்கின்றன. இந்நிலையில் வடமாகாணத் துக்கான 132 கிலோ வோட் வவுனியா அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது நாளை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை துண்டிக்கப்படவுள்ளது.

ஆகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்ப டும். மேலும் திருத்த வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here