தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை - உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 68 வயதுடைய நபர் ஒருவரும், 59 வயதுடைய அவரது மனைவியுமே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரிகள் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Tags:
sri lanka news